யாழில் சனி ஆர்ப்பாட்டம்!



காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் கண்டன போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்சாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நாளை மதியம் ஆர்ப்பாடட் போராட்டம் இடம்பெறுமென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாhர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வரதராஜப்பெருமாளின் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சுகு, மின்சார சேவைச் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் க.இளங்குமரன்,சோசலிச இளைஞர் சங்க அமைப்பாளர்களான கே.சரவணன், ச.கணேசரூபன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தனர்.


No comments