பணிப் புறக்கணிப்பில் இ.போ.ச?



வடமாகாணத்தில் நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அறிவிப்பை விடுத்துள்ளனர்.

சாரதிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க போதிய பெற்றோல் விநியோகத்தை அரசு முன்னெடுக்கவில்லையென தெரிவித்தே நாளை முதல் வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது எழு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளன.


No comments