பதுக்கிய பெற்றோல் எரிந்து மாணவி பலி!

 




யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் சுவாமிப் படத்திற்கு விளக்கேற்றிய நெருப்பை எரித்தபோது   அறையில்  வைத்திருந்த பெற்றோல் மீது தீப்பற்றியதில் 17 வயது மாணவி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இதன்போது தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின்  மாணவியான சுதர்சன் சுதர்சிகா என்னும்  17 வயது மாணவியை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று   மாலை இடம்பெற்றுள்ளது.

சாமி படத்துக்கு விளக்கேற்றிவிட்டு வீசிய தீக்குச்சி சாமி அறையில்  வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மீது பாட்டு வீடு தீப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சாமி அறையில் பெட்ரோல் நிரப்பிய கான்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கம் போல்  குறித்த மாணவி சாமி அறையில் விளக்கேற்றி விட்டு தீக்குச்சியை கீழே வீசியுள்ளார், அதிலிருந்து பறந்த தீப்பொறி பெற்றோல் மீது பட்டு வீடு தீப்பற்றி எரிந்து உள்ளது.


No comments