ஆர்ப்பாட்டத்திற்கு தடையில்லை!

 


இலங்கையில் நாளையும் நாளை மறுதினமும் பாராளு மன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், சட்டமா அதிபர் திணைக் களம் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக உத்தரவைப் பெற முயற்சித்ததாக சட்டத்தரணி கமல் விஜேசேகர தெரிவித்தார்.

பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கான சிறப்புரிமையை மீறுவதாக பொலிஸார் தெரிவித்ததாகவும், இது நிகழ்வுகளுக்கு தவறான வியாக்கியானம் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments