யோஷித ராஜபக்ச குடும்பத்தினரும் அவுஸ்திரேலியாவில்!



முன்னாள் பிரதமரின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்று மெல்பேர்ண் நகரில் வசித்து வரும் நிலையில் அவரை காப்பாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யோஷித ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்று மெல்பேர்ணில் உள்ள இந்திக பிரபாத் கருணாஜீவ மற்றும் அவரது மனைவி ஷாதியா கருணாஜீவ ஆகியோரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக அண்மையில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி வெளியாகிய பின்னர், யோஷித மற்றும் அவரது குடும்பத்தினரை ராஜபக்சவினருக்கு நெருக்கமான மோசடி கும்பலான கபில சந்திரசேன என்பவரின் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டனர்.

அப்போது பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற வகையில், அந்த நிறுவனத்திற்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் அவர் மீது இலங்கையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


No comments