வருகிறதாம் டீசல்!



இலங்கைக்கு வந்த மற்றுமொரு எரிபொருள் கப்பலுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பலிலுள்ள 28,300 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 9000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் நாளை முதல் இறக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அண்மையில்  37,300 மெற்றிக் தொன் டீசல் ஏற்றி வந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்ட தாகவும், அதன்படி நாளைய தினம் நாட்டின் டீசல் மற்றும் விமான எரிபொருள் கையிருப்பு 74,600 மெட்ரிக் தொன்னாக இருக்கும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த வருடத்தின் இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

No comments