நெடுந்தீவு கைதுக்கு பதிலடி:வல்வெட்டித்துறை மீனவர் கைது!



சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் யாழ்ப்பாண தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் நேற்றுமுன்தினம் (28) கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம்  சாந்தரூபன் (வயது-30) எனும் மீனவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த மீனவர்; , கைப்பற்றிய படகுடன்; கோடிக்கரை படகு துறைமுகத்திற்கு நேற்று  (29) இரவு 8 மணி அளவில் அழைத்து வரப்பட்டார். 

அழைத்து வரப்பட்ட  இலங்கை மீனவரை சுங்கதுறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி, கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் குமார், கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments