சுமந்திரன் கொழும்பு கோட்டையில் இறங்கினார்!

எம்.ஏ.சுமந்திரனின் ஆட்சி மாற்றத்திற்கான வேலை திட்டம் முனைப்படைந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திக்காக தூதரகங்களை முன்னின்று செயற்படுவதாக அண்மையில் கோத்தபாய குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 1 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பின் ஊடான அதன் இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம், மனோ கணேசன் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் அண்மையிர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்த இந்த போராட்டம் கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது

No comments