பருத்தித்துறை பிரதேச செயலகம் முடக்கம்!

மருதங்கேணி பிரதேச செயலக முடக்கத்தை தொடர்ந்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் எல்லைதாண்டும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிலைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்திய மீனவர்களால் யாழ்ப்பாண மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றமை, மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை உட்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடக்கின் அரச அலுவலகங்களை முடக்கத் தீர்மானித்துள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.


வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரை இந்திய மீனவர்கள் படகுகளால் மோதிப் படுகொலை செய்யப்பட்டமையினையடுத்து வீதிகள் முடக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த கடற்படையினர் உத்தரவாதம் வழங்கவேண்டும், அதேபோல கடற்றொழில் அமைச்சரும் வாக்குறுதி வழங்கவேண்டும்.வழமைபோல வாக்குறுதி வழங்கியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அத்துமீறல்கள் தொடர்ந்தால் தொழில் முடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும், அதேபோல பிரதேச செயலகங்கள், கச்சேரி உட்பட்ட அரச திணைக்களங்களை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



No comments