இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 3 ஆணடுகள் சிறை!!


இந்திய மீனவர்களுக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 31 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

பருத்தித்துறை மீனவர்களிடம் இருந்து இந்திய மீனவர்களை மீட்ட கடற்படை அவர்களை கைது செய்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.

21 மீனவர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது 21 மீனவர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிவான் , அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

No comments