வேட்டியை மடிச்சுகட்டி கிளம்பினார் டக்ளஸ்!

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராடிவரும் மீனவர்களை தாக்க பழையபடி வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டார் டக்ளஸ். இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்த போது, மீனவர்கள் சமரசத்திற்கு சம்மதிக்காத நிலையில், அமைச்சர் திரும்பியிருந்தார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிகை முன்வைக்கப்பட்டது. 

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும் தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை மீனவர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில் மீனவர்கள் சீற்றமடைந்து டக்ளஸ் பயணித்த சொகுசு வாகவனத்தை தடுக்க முற்பட மீனவர்களை தாக்க பழையபடி வேட்டியை தூக்கி கடடிக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.


No comments