முல்லைத்தீவு குமுழமுனையில் உயிருக்குப் போராடும் யானை!!
முல்லைத்தீவு குமுழமுனை மேற்கு கரடிப்பூவல் பகுதியில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்று விவசாய நிலத்தில் வீழ்ந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மேற்கொண்டு நடந்துகொள்ளமுடியாத நிலையில் நிலத்தில் வீழ்ந்த நிலையில் குறித்த யானை காணப்படுகின்றது.
சுமார் மூன்றரை வயதுடைய குறித்த குட்டியானை வாய்காயத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளமுடியாத நிலையில் விவசாயிகளின் விளைநிலத்திற்குள் வந்து வீழ்ந்துள்ளது.
யானை வீழ்ந்துள்ள சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை 31.12.21 காலை சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடைமருத்துவர் டி.கிரிதரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
Post a Comment