தின்று தீர்த்தது மட்டும் ஒன்பது கோடியாம்!

இலங்கையில்  நாடாளுமன்றத்திற்கு வருகை தரும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 9 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை பல்வேறு குழுக் கூட்டங்களுக்கு வருகை தரும் அரசாங்க அதிகாரிகளின் உணவுத் தேவைகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்த்தி செய்கிறார்கள் என்றும் அவையும் இந்தச் செலவில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பல்வேறு ஊழல்கள் மற்றும் வீண்விரயங்கள் காரணமாக நாடாளுமன்றில், உணவு மற்றும் பானங்கள் இழக்கப்படுவதை தடுக்கும் வகையில், செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அண்மைக்காலமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரிசி, மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தற்போது நாடாளுமன்ற உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments