அத்துரலியவிற்கு அரசியல் சலிக்கின்றது?

 


மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தேர்தலில் போட்டியிடாது தம்ம தியானத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பல கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்து தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்தவர்.

தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்வதற்காக கட்சியுடன் கடும் மோதல்களிலும் ஈடுபட்டார்.

No comments