யாழ்.ஊடக அமைய ஒருங்கிணைப்பில் கறுப்பு ஜனவரி!



நீதி வேண்டி யாழில் யாழ்.ஊடக அமையத்தின் முழுமையான ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் 'கறுப்பு ஜனவரி' போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நகரில் மத்திய பேருந்து நிலையம் முன்பதாகவே இன்று(31) 'கறுப்பு ஜனவரி' கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

மேலும், யாழ்.ஊடக அமைய ஒருங்கிணைப்பில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'கறுப்பு ஜனவரி' போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   



No comments