மின்வெட்டு தற்போதைக்கில்லை!


இலங்கையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பல நாட்களாக பழுதடைந்திருந்த மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் உற்பத்தித் திறன் 300 மெகா வாட்ஸ் இன்று முதல் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும்.

இதனால் இன்று மின்சாரம் தடைப்படவில்லை என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனல் மின் நிலையங்களும் தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதால் அடுத்த சில நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக் கின்றன

No comments