வீண் பரிசோதனை வேண்டாம்!



இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டரில் பாதுகாப்பற்ற முறையில் கசிவை பரிசோதிக்க முயற்சிக்க வேண்டாம் என எரிவாயு அனர்த்தங்கள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடையாளம் காண்பதற்காக புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய லிட்ரோ கொள்கலன்களை அடையாளம் காண்பதற்காக, அந்நிறுவனத்தின் எரிவாயு கொள்கலன்களில் வெள்ளை பின்னணியில் சிவப்பு நிறத்திலான லிட்ரோ நிறுவனத்தின் இலட்சினை கொண்ட பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.

No comments