அரசியல் கைதிக்கு விருது!
மகசீன் சிறையில் தண்டனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி செ.சதீஸ்குமார் சிறையிலிருந்து எழுதி வெளியிட்ட நூலொன்று பரிசு பெற்றுள்ளது.
இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசியல் கைதி சதீஸின் தாயார் பரிசை கண்ணீருடன் பெற்றுக்கொண்டார்.
அரச பணியாளரான சதீஸ் கொழும்பிற்கு செல்கையில் அவர் எடுத்துச்சென்ற வாகனத்தில் வெடிபொருள் இருந்ததாக 2008ம் ஆண்டினில் கைதாகியிருந்தார்.
தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment