மீன் பிடிபடவில்லை:கைக்குண்டு கிடைக்கிறது!

 


வடகிழக்கில் மீண்டும் வெடிபொருட்கள் அகப்பட்டுவருவதாக இலங்கை அரசு கூறிவருகின்ற நிலையில் யாழ்.மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி - மயிலிட்டி பகுதி கடலில் நேற்றைய தினம் மீனவர் ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது , அவரது வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது. 

அது தொடர்பில் அவரால் , பலாலி பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அதனை மீட்டு சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது. 

No comments