தெல்லிப்பளையில் இளம்பெண் கடத்தப்பட்டார்!


யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இளம் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

ஹைஏஸ் சிற்றூர்தி வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

தெல்லிப்பழை மருத்துவமனையில் பணிபுரியும் குறித்த இளம் பெண் தனது சகோதரனது உந்துருளியில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் சகோதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments