சம்பந்தனிற்குப் பின் கூட்டமைப்பு கூட்டுத்தலைமையாக இருக்கும் - செல்வம்


சம்பந்தன் அவர்களின் காலத்தின் பின்னர், கூட்டுத் தலைமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுமென, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில், இன்று(14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர். இதற்கு பதிலளித்து கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments