உர விவகாரம்:ஆட்டங்காணும் இலங்கை அரசு!



உர தடை விவகாரம் இலங்கை அரசை ஆட்டிப்படைத்துவருகின்ற நிலையில் தாமதமாக அவசர அவசரமாக உயர்தர நைட்ரஜன் திரவ உரங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் என  விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நெல் அதிகளவில் பயிரிடப்படும் அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதலில் இந்த நைட்ரஜன் திரவ உரங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு தேவையான மூன்று வகையான உரம், கரிம திரவ உரம் மற்றும் பொட்டாசியம் குளோரைட் ஆகியவை ஏற்கனவே அம்பாறை விவசாய மேம்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உரங்களது தட்டுப்பாட்டால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் அமைச்சர்களது கொடுப்பாவிகளை எரிப்பது உள்ளிட்ட போராட்டங்களை முடுக்கவிட்டுள்ளனர்.


No comments