மீண்டும் தொடங்கியது கைது வேட்டை!




வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விவகாரம்  சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் அத்துமீறி மீன்பிடியில  ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மீனவர்களின் இரண்டு படகுகளை கைப்பற்றியுள்ளதாக இலங்கை  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களை சிறைப்பிடிக்க உள்ளுர் மீனவர்களை அமைச்சர் டக்ளஸ் தூண்டிவிட்டுள்ள நிலையில் இலங்கை கடற்படை கைதுகளை ஆரம்பித்துள்ளது.


No comments