சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா! மருத்துமனையில் அனுமதி!!


தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளாார்.

இந்நிலையில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு இன்று சனிக்கிழமை முற்பகல் 11 சென்ற அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுத்திப்படுத்தப்பட்டது .

அதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்ற அடிப்படையில் எம்.கே.சிவாஜிலிங்கம் அம்புலன்ஸில் கோப்பாய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் க.சிவாஜிலிங்கம் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான நிலையில், கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இருந்தவாறு. யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் முன்னெடுத்த பாரதியார் நினைவுதின நிகழ்வில் காணொலி ஊடாக பங்கெடுத்திருந்தார்.

No comments