வடமராட்சி அல்வாயில் ரவுடிகள் அட்டகாசம்


வடமராட்சி - அல்வாய் பகுதியில், ரவுடி கும்பலால் இரண்டு குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளன.

அல்வாய் வடக்கு, மகாத்மா வீதியில், கடந்த 2ஆம் திகதியன்று, அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பலைச் சேர்ந்து ஒருவரால், அங்குள்ள வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து,  சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர்,  சனிக்கிழமை(25) மாலை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


இதனை தொடர்ந்து, குறித்த நபரின் சகோதரர் ஒருவர், சிலரை இணைத்துக் கொண்டு, சனிக்கிழமை(25) இரவு, குறித்த கிராமத்துக்குள் புகுந்து, அங்குள்ள குடிசைகளுக்கு தீ வைத்ததுடன், பல வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளார். 

இதன் காரணமாக அச்சமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் இதனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments