புறுபுறுக்கும் பங்காளிகள்:மகிந்தவுடன்பேச்சு!



இலங்கையில் பொதுஜனபெரமுன பங்காளிகள் அமைச்சு பதவிகளிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதான அறிவிப்பின் மத்தியில் மஹிந்த ராஜபக்சவுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இன்று(23) கலந்துரையாடவுள்ளனர்.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பன கேள்வி பத்திரம் இன்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்த நிலையில், இன்று பிற்பகல் வரை இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிற்பகல் 4.30 மணியளவில் ஆளும் கட்சியினது பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மகிந்தவிற்கிடையேயான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.


No comments