மஹிந்தவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் கொரோனாவுக்குப் பலி!!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகரும் உலக பிரசித்திதிபெற்ற மூலிகை  மருத்துவருமான எலியந்த வைட் கொரோன வைரஸ் தொற்றினால் இன்று புதன்கிழமை  (22) உயிரிழந்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, லசித் மாலிங்க, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு பண்டைய கால மருத்துவ முறைகள் மூலம் நோய்களையும் உபாதைகளையும் குணப்படுத்தியவர் ஆவார்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு வார காலம் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டவேளையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments