நல்லூரில் காவல்துறையினர் பொதுமக்கள் முறுகல்!!

 


நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிகையிலா​னோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில்  காவல்துறையினரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.



பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.

No comments