காணாமல் போனவற்றில் பால்மாவை தொடர்ந்து சீனியும்!



இலங்கையில் ஆட்கள் காணாமல் போன கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக பொருட்கள் காணாமல் போக தொடங்கியுள்ளன.

ஏற்கனவே மஞ்சள்,பால்மா,காஸ் சிலிண்டரென பெருமளவில் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது சீனியும் காணாமல் போயுள்ளது.

இரட்டித்த விலையில் கறுப்பு சந்தையில் சீனி தற்போது விற்கப்பட்டுவருகின்றது.

இதனிடையே சதொச நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 5ஆயிரம் டொன் சீனி கொழும்பு துறை முகத்தில் சிக்கியுள்ளமையாலே நாட்டில் திடீரென சீனிக்கு தட்டுப்பாடு நிலவியதாகவும் , தற்போது துறைமுகத்திலிருந்து சீனியை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையால் , ஓரிரு நாட்களில் சீனிக்கான தட்டுப்பாடு நீங்கி விடும் எனவும் அரசு விளக்கமளித்துள்ளது. 

அதேவேளை தற்போது நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு நிலவுவதனால் தற்போது சீனி 220 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments