ஆர்ப்பாட்டம்: இருவர் கைது! காயமடைந்த அதிகாரி வைத்தியசாலையில்!

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற சுற்றவட்டத்துக்கு அருகில், நேற்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது.

இதனிடையே பாராளுமன்றம் அருகே நேற்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது, காயமடைந்து வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டிருக்கும் மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் நிலையத்தின்  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எச். ஜனகாந்த சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 குறித்த பொலிஸ் அதிகாரியின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, மூன்று மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள்,  வீதி தடுப்பைத் தூக்கி எறிய முயன்ற நிலையில் அதனை தடுக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சித்த போது பொலிஸ் அதிகாரி இவ்வாறு காயமடைந்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை திரும்பப் பெறக் கோரி, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments