டெல்டா வேகம்:முடங்குமா இலங்கை!





இலங்கை டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் திண்டாடிவருகின்றன.குறிப்பாக ஒட்சிஸனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளநிலையில் அதிகரிக்கும் ஒட்சிஸனின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

டெல்டா தொற்று பல பகுதிகளில் அதிகமான அளவு பரவியிருப்பதால், வரும் நாட்கள் மிக மோசமானதாக  இருக்கும் எள மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

இதுவரை கட்டுப்பாடுகள் பற்றி பேச்சுக்கள்  ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், சுகாதார அமைப்பு தீர்ந்துவிட்டால், தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பாதிக்கப்படுவார்;களானால், நாட்டை முடக்குமாறு சில மருத்துவ வல்லுநர்கள் கோரிக்கை விடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர், ஆனால் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் உள்ளன. 


No comments