மூடப்படுகின்றது கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை!



சர்ச்சைக்குரிய வகையில் இயங்கிவரும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.அதேவேளை இடைநிறுத்தப்படும் காலப்பகுதியில் ஊதியமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கொத்தணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை மூடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments