மாவட்டங்கள் தோறும் இம்முறை நினைவேந்தல்!



நீதிமன்ற தடைகளையடுத்து வடகிழக்கில் மாவட்டங்கள் தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தனித்தனி நடத்த அரசியல் கட்சிகள் முற்பட்டுள்ளன..

யாழில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்துள்ளார்.

சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இலங்கை குற்றவியல் சட்டம் 106ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஏ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கட்சிகள் பலவும் மாவட்டங்கள் தோறும் நினைவேந்தலை நடத்த திட்டமிட்டுள்ளன.


No comments