யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் காட்சிப்படுத்தலும்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின்

இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும்.

யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் குவித்து அழித்த இடத்தில் (Bebelplatz, Berlin ) யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டை நினைவேந்தும் முகமாக தமிழீழ விடுதலையை தலைமுறைகடந்து புலம்பெயர் நாட்டில் பிறந்தாலும் தாய் மண்ணை முத்தமிட துடிக்கும் குழந்தைகளின் சார்பில் செல்வன் ஆதவன் அவர்கள் சுடர்வணக்கம் செலுத்திவைத்தார். அதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ் இளையோர் அமைப்பினரால் இவ் நிகழ்வில் வைக்கப்பட்ட கண்காட்சியை பல வேற்றின மக்கள் பார்வையிட்டனர்.அத்தோடு அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/ நடைபெறும் இனவழிப்பை கண்டித்து தமது கருத்துக்களை பதிவுசெய்ததோடு தமிழ் இளையோர் அமைப்பினரால் மேலதிகமான விளக்கத்தையும் துண்டுப்பிரசுரத்தையும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் திடீர் என காவல்துறை தமிழீழ தேசியக்கொடியை அகற்றும் மாறு வேண்டிக்கொண்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ் உணர்வாளர்கள், தொடர்ந்து காவல்துறைக்கு ஈழத்தமிழர்களின் தேசிக்கொடி சார்ந்து விளக்கம் அளித்தனர். இவ்விடையம் யேர்மன் நாட்டின் பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு, இறுதியில் காவல்துறை தமிழ் உணர்வாளர்களிடம் தமது தேசிக்கொடியை தொடர்ந்தும் நிகழ்வில் வைத்திருக்கலாம்,அதற்கு எவ்வித தடையும் இல்லை, தம்மால் சரியான புரிதல் இல்லாது நடைபெற்ற இடையூறுக்கு தமது கவலையை தெரிவித்தனர்.


No comments