#P2P: சீலனை கைது செய்ய முயற்சி!

 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க இணை தலைவர்களுள் ஒருவரான சீலன் என்றழைக்கப்படும் சிவயோகனை கைது செய்ய

மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அவரது மட்டக்களப்பு வீட்டிற்கு சென்றிருந்த காவல்துறையினர் அவரை கைது செய்ய முற்பட்டிருந்தனர்.எந்தவொரு ஆணையுமின்றி கைது செய்ய முற்பட்டதையடுத்து நீண்ட நேரம் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.எனினும் பொதுமக்கள் திரண்டதையடுத்து முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் மேலும் 46 கொரோனா உயிரிழப்புகள் அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,178ஆக உயர்ந்துள்ளது.

இதனைபயன்படுத்தி முடக்க நிலையை பேணியவாறு கைதினை அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments