பெண்ணைத் துரத்திய கும்பல்! உந்துருளியை எரித்தது!


யாழ். நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் உந்துருறுளி ஒன்றை கும்பல் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்று மாலை வெள்ளிக்கிழமை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து வீடு திரும்பிய போது பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்து தடுத்துள்ளது.

அவர்களிடமிருந்து தப்பிக்க உந்துருறுளியை வீதியில் கைவிட்டு விட்டு குறித்த பெண் வீடொன்றுக்குள் சென்ற போதே உந்துருறுளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

No comments