மன்னார் மீனவர்கள் தனுஸ்கோடியில் கைது!



தமிழகத்தின் தனுஸ்கோடியில் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இந்திய கடற்பகுதிக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் பகுதி மீனவர்கள் இருவரை  படகுடன்  தனுஸ்கோடி பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதாப்,அடம்பன்,மன்னார மற்றும் நாகேஸ் மன்னார ஆகியோரை தனுஸ்கோடி மீனவர்கள் பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


No comments