மாகாணசபைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

 


எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை கட்சிகள் தேடத்தொடங்கியுள்ள்.

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதற்கு எதிர்ப்பார்ப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,  முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட விரும்புபவர்கள், எதிர்ப்பார்ப்பவர்களிடமிருந்து தமது   கட்சி அலுவலகம் விண்ணப்பங்களை கோரியுள்ளதாகவும்  இது தொடர்பான மேலதிகத் தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில் கண்டியிலுள்ள தமது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விண்ணப்பங்கள் கிடைத்தப் பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என்றும் வெற்றிகரமாக தேர்தலை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயார்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


No comments