உயிர்த்த ஞாயிறு:இழந்ததை பெற துடிப்பு!



தென்னிலங்கையில் கத்தோலிக்க மக்களிடையே ஏற்பட்டுள்ள ஆதரவு இழப்பை உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிறுத்தி மீண்டும் திரட்ட கோத்தா அரசு முற்பட்டுள்ளது.

ஞாயிறு தினத்தை முன்னிறுத்தி எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக செய்திகள் கசியவிடப்பட்டுள்ளது.


கத்தோலிக்க தோவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அவதானம் செலுத்தப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன என்பவர் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்யுமாறு இராணுவத் தலைமையகம் அந்தப் பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், பொலிஸார் மேற்கொள்ளும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்க்பபட்டுள்ளது.


மேலும், அடையாளம் காணப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் இராணுவத் தலைமையகம்  அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன என்பவர் கூறியுள்ளார்.


No comments