திங்கட்கிழமை மாலை இறுதி திருப்பலியும்!


எதிர்வரும் திங்கட்கிழமை வட கிழக்கில்  கறுப்பு கொடிகட்டி மன்னார் ஆயருக்கு அஞ்சலி செலுத்த  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயரின் இறுதி திருப்பலி திங்கள் மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்  இடம்பெற வுள்ளது.

ஓய்வுநிலை இரண்டாவது மன்னார் ஆயர் இராயப்பு யோசப்  இன்று காலை காலமானார்.ஆயருருடைய திருவுடல் தற்பொழுது யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

நாளை காலை 11 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை மதியம் மன்னாருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை அவரது இறுதி திருப்பலியும் மன்னர் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது

1981 ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை மன்னார் மாவட்ட இரண்டாவது ஆயராக கடமை யாற்றி ஓய்வு பெற்று சுகவீனமுற்று யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இவ்வுலகை விட்டு சென்றிருந்தார்.

ஆயரின் திரு வுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்று கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதன் 

இலங்கையினுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்  முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் கொல்லப்பட்டார் கள்என்ற செய்தியை வெளிப்படையாக துணிச்சலுடன்  சொன்ன ஒரு மனிதர் .

No comments