கிளிநொச்சி குளத்தில் கரையொதுங்கிய பெண்ணின் உடலம்!


கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது. 

குறித்த பெண் 30 வயது மதிக்கதக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments