மீண்டும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள்!



வட மாகாணத்துக்கான விஜயத்தை இந்திய உயர் ஸ்தானிகர் மேற்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரத்மலானை - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசினால் பெரும்பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் கோத்தபாய அரசினால் தொடர்ந்தும் தடுக்கப்பட்டே வந்திருந்தது.

குறிப்பாக விமான நிலையத்திற்கான பிரதான போக்குவரத்து பாதைகள் தொடர்ந்தும் மூடப்பட்டேயுள்ளமை குறிப்பிடடத்தக்கது,

 


No comments