ஜெனீவாவில் புலிக்கொடியாம்:கவலையில் சிங்களம்!

 



ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தாலும், சுவிஸ் பொலிசார் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்றுவதை நிறுத்தவில்லை.

விடுதலைப்புலிகளின் கொடி மனித உரிமைகள் பேரவையின் முன்னுள்ள ஒரு சுரங்க சின்னம் அருகே ஏற்றப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையும் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்றியதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.


No comments