செம்மணியில் கைவிடப்பட்ட வெடிபொருள் பொதி!


யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிமருந்து பொதியொன்று வீசப்பட்டிருந்தமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானப்பகுதியில் புதிய பையொன்றினுள் குறித்த வெடிமருந்துகள் வீசப்பட்டிருந்தமையினை பொதுமக்கள் கண்டு அறிவித்துள்ளனர்.

எனினும் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தவென கடத்தப்பட்ட வெடிபொருளே வீசப்பட்டுள்ளதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.



No comments