இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கோபம் வந்ததாம்?



இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறுகளை தாம் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாம் எமது எதிர்ப்பை மிக மிக கடுமையாக இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்திருக்கின்றோம். அதற்குப் பதிலாக இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இலங்கையில் தற்போது இந்திய மீனவர்கள் எவருமே தடுப்புக் காவலில் இல்லை. ஜனவரி 18 ஆம் திகதி இலங்கைக் கடற்படையின் கப்பலால் மோதுண்ட இந்திய மீன்பிடிப்படகிலிருந்த 4 இந்திய மீனவர்களின் மரணம் தொடர்பில் நாம் கடுமையான ஒரு நிலைப்பாட்டையே எடுப்போம்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கடுமையான கண்டனத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். டில்லியிலுள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகருக்கும் கடுமையான எதிர்ப்பை இந்தியா தெரியப்படுத்தியிருந்தது.

இலங்கையில் தற்போதைய நிலையில் இந்திய மீனவர்கள் யாரும் தடுப்புப் காவலில் இல்லை என்பதையும் தெரிவித்திருக்கும் அவர், தடுப்புக்காவலில் இருந்த 9 மீனவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்,

No comments