கொவிட் மருந்துடன் வருகை தரும் புதிய அனுமார்?


கொவிட் மருந்து விநியோகத்திலாவது சீனாவை முந்திக்கொள்ள இந்திய முற்பட்டுள்ளது.

ஏற்கனவே பீசிஆர் முதல் மாஸ்க் வரை சீனா இலங்கையில் கடை விரித்துள்ள நிiலையில் இந்தியா கொவிட் மருந்துடன் களமிறங்குகின்றது.

 கொவிட் நோய்த் ​தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இந்தியா தயார் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், இன்று காலை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த ஜனாதிபதி, இந்தியாவால் உற்பத்தி செய்யப்படுகின்ற கொவிட்-19 தடுப்பூசியை, தேவைக்கேற்ப சரியான மதிப்பீட்டுக்குப் பின்னர் கொள்வனவு செய்வதற்கு, இலங்கை விரும்புகின்றது என்றார்.

ஏனைய நாடுகளுக்குத் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் போது, இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

No comments