இலங்கை:40ஆயிரத்தை எட்டுகிறது?



மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதில் 588 பேர் திவுலபிட்டிய – பேலியகொடை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


ஏனையோர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொடை கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது.


அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 231ஆக உயர்ந்துள்ளது.


தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை கொரோனா சந்தேகத்தில் 462 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந் தவர்களின் மொத்த எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

No comments