கொழும்பில் ஜந்தாவது தமிழ் ஊடகவியலாளர்?


கொழும்பில் ஜந்தாவதாக மேலுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் சென்ற தமிழ் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கே கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு ஆங்கில பத்திரிகை,3 சிங்கள பத்திரிகை

மற்றும் ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று

உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ்   காரணமாக  இலங்கையில்; சுமார்  63 ஆயிரத்து 600இக்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இதில்  குருநாகல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 452 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 900இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


No comments