கைதியை அடித்துக்கொன்ற சிறைச்சாலை அதிகாரிகள்?


மொனராகல சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளிற்கும் கைதியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

கைதியொருவர் சிறைச்சாலை அதிகாரியொருவரை கல்லால் தாக்கிய சம்பவத்தினை தொடர்ந்து இரு சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை தாக்கியதன் காரணமாக காயமடைந்த கைதி பின்னர் உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்த கைதி அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சிறைச்சாலை அதிகாரி சென்றவேளை தன்னை திறந்துவிடுவதை தாமதப்படுத்தியதற்காக சிறைக்கைதி சிறைச்சாலை அதிகாரியை ஏசியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வலுத்தவேளை  சிறைச்சாலை அதிகாரி கைதியை தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக காயமடைந்த கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கைதியால் தாக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரியி;ன் கைஉடைந்துள்ளது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments