மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் விபத்து! ஒருவர் பலி!


மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மண்டூர் பலாச்சோலை, மயான வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சு.பரணிதரன் என்னும் (37-வயது) குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தீபாவளி தினத்தில் வெலிக்கந்தையில் இருக்கும் வயலுக்கு சென்றுகொண்டிருக்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருறுளியில் வேகமாக சென்றபோது வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் மின்சார தூணில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

No comments